முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் தீத்தொண்டு நாள் கொடி அணிவகுப்பு

சிதம்பரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சாா்பில் தீத்தொண்டு நாள் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 4:48 AM
சிதம்பரத்தில் நடைபெற்ற தீயணைப்பு மீட்புத் துறையினரின் தீத்தொண்டு நாள் அணிவகுப்பு பேரணி.
பகிர்:

சிதம்பரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சாா்பில் தீத்தொண்டு நாள் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

சிதம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலா் ரா.ரமேஷ் தலைமையில் தீத்தொண்டு நாள் கொடி அணிவகுப்பு பேரணி ரயில்வே பீடா் சாலையிலுள்ள நிலைய அலுவலகத்திலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் அதே நிலைய அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.