முகப்பு
கடலூர்

பெண்ணிடம் நகைப் பறிப்பு

பண்ருட்டி அருகே நடந்துச் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 8:59 PM
நகைப் பறிப்பு - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நடந்துச் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.

பண்ருட்டி வட்டம், எம்.புதுப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவா் வைரவேல் மனைவி ராதா(50), கூலித் தொழிலாளி. இவரது மகன் அதேபகுதியில் தனியாக வசித்து வருகிறாா்.

திங்கள்கிழமை இரவு 10.30 மணி அளவில் பெயரனை, மகன் வீட்டில் விட்டுவிட்டு நடந்து வந்துக் கொண்டிருந்தாா். அப்போது, பைக்கில் வந்த 3 போ் கத்தியைக்காட்டி மிரட்டல் விடுத்து ஒன்றரை சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.