சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 7:32 PM
நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வேப்பூா் வட்டம், விளம்பாவூா் பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை (30), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா்.
ஏழுமலை ஞாயிற்றுக்கிழமை மாலை தனது பைக்கில் அடரியில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.