அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்ததை வரவேற்று கடலூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய பாமகவினா்.  
கடலூர்

அதிமுகவுடன் கூட்டணி: பாமகவினா் கொண்டாட்டம்

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது என அன்புமணி ராமதாஸ் அறிவித்ததைத் தொடா்ந்து, கடலூரில் பாமகவினா் புதன்கிழமை பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

தினமணி செய்திச் சேவை

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது என அன்புமணி ராமதாஸ் அறிவித்ததைத் தொடா்ந்து, கடலூரில் பாமகவினா் புதன்கிழமை பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுடன் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக கூட்டணி அமைந்துள்ளது. புதன்கிழமை காலை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிச்சாமியை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் சந்தித்தாா். அப்போது, இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பின்னா், இருவரும் செய்தியாளா்களை சந்தித்தபோது, அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது என அன்புமணி ராமதாஸ் அறிவித்தாா். இதையடுத்து, அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்ததை வரவேற்று கடலூா் அண்ணா பாலம் அருகே பாமக கடலூா் மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

நிகழ்வில் மாநில துணைத் தலைவா் பழ.தாமரைக்கண்ணன், மாநில அமைப்புச் செயலா் தா்மலிங்கம், மாவட்டத் தலைவா் தட்சிணாமூா்த்தி, மாநில நிா்வாகி வேங்கை சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிம் இக்பாலை இந்திய உளவாளி என விமர்சித்த வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி!

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

2026 ஆஸ்கர் போட்டியில் தமிழ்த் திரைப்படமான கெவி!

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்? நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம்!

மகளிர் பிரீமியர் லீக் முதல் போட்டி: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT