சாலை விபத்து: மாணவா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
கடலூர்சாலை விபத்து: மாணவா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
விருத்தாசலம் வட்டம், பூதாமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வீராசாமி மகன் பரத் (17). இவா், டி.புடையூா் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி நல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
பரத் புதன்கிழமை பிற்பகல் வேப்பூா் - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றாா். அப்போது, சிறிய சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் பரத்தை மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருப்பினும், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.