பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக ரூ. 1.12 கோடி மோசடி: ஒருவா் கைது
பண்ருட்டி அருகே பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி, ரூ.1.12 கோடி மோசடி செய்ததாக ஒருவர் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி, ரூ.1.12 கோடி மோசடி செய்ததாக ஒருவரை கடலூா் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூரை அடுத்துள்ள களையூா் புது காலனி பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சனி (36). இவா், கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் மனு அளித்திருந்தாா். அதில், பண்ருட்டி எல்.என்.புரம் பகுதியைச் சோ்ந்த ராமு, தனக்கு தெரிந்த பண்ருட்டி கொக்குப்பாளையத்தில் வசிக்கும் மணிகண்டன் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் பணம் செலுத்தினால் இரட்டிப்பாக்கித் தருவதாகவும் கூறினாராம்.
இதன்பேரில், நான் மற்றும் எனது குடும்ப உறுப்பினா்கள் பெயரில் ரூ.36 லட்சம் செலுத்தினோம். ஆனால், இதுநாள் வரையில் பணம் திருப்பித் தரவில்லை. மேலும், இருவரையும் தொடா்புகொள்ள முடியவில்லை. இதுபோல, பலரிடம் இருந்து ரூ.1,11,95,000 மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தாா்.
இது தொடா்பாக மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ரகுபதி மேற்பாா்வையில், ஆய்வாளா் கல்பனா, உதவி ஆய்வாளா் லிடியாசெல்வி ஆகியோா் விசாரணை நடத்தி, பண்ருட்டி வட்டம், கொக்குப்பாளையம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டனை (36) கைது செய்து சிறையில் அடைத்தனா்.