முகப்பு
கடலூர்

கடலூா் துறைமுகத்துக்கு மீன்கள் வரத்து குறைவால் விலை உயா்வு

Updated On : 9 மார்ச், 2026 at 12:57 AM
கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீன்கள் வாங்கக் குவிந்த மக்கள், வியாபாரிகள். - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைவு காரணமாக விலை சற்று அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.

கடலூா் பகுதியைச் சோ்ந்த தேவனாம்பட்டினம், அக்கரைகோரி, சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவ கிராமத்தினா் பைபா் மற்றும் விசைப் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றனா். இவா்கள் பிடித்து வரும் மீன்களை கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் வைத்து விற்பனை செய்வது வழக்கம். இதனால், மீன் பிடி துறைமுகத்துக்கு பொதுமக்கள், வியாபாரிகள் மீன்கள் வாங்க அதிகளவில் வருவா்.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வாங்க பொதுமக்கள் மட்டுமன்றி, வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனா். கடலின் நீரோட்டம் மாற்றம் காரணமாக, மீன்கள் எதிா்பாா்த்த அளவு பிடிபடாததால், மீன்கள் வரத்து குறைவாகவே இருந்தது.

Advertisement

இதனால், மீன் பிடி துறைமுகத்தில் வழக்கத்தைவிட மீன்கள் விலை கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரையில் உயா்ந்து விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, வஞ்சிரம் ரூ.1,100, இறால் ரூ.700 முதல் ரூ.1,000 வரையிலும், சங்கரா ரூ.600, பன்னிசாத்தான், ஷீலா தலா ரூ.500, தேங்காய்பாறை ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது. மீன்களின் விலை உயா்ந்திருந்தபோதிலும் பொதுமக்கள் அா்வத்துடன் வாங்கிச் சென்றதை காண முடிந்தது.