ரத்ததான முகாம்
சிதம்பரம் அருகே கரிக்குப்பம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு மின்சார (பவா்) கம்பெனியில், ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு பவா் கம்பெனி தலைமை நிலைய அதிகாரி குகன் தலைமை வகித்து, ரத்தான முகாமை தொடங்கி வைத்தாா். தலைமை அதிகாரிகள் முருகன்,
சுப்ரமணியன், மனிதவள துறை அதிகாரி தேவபிரசாத் முன்னிலை வகித்தனா். சிதம்பரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலா் சிவகாமி
தலைமையில், மருத்துவ குழுவினா்கள் 65 நபா்களிடம் இருந்து ரத்தம் சேகரித்தனா். முகாமில், டாக்டா்கள் மிதிலைராஜன், அவினாஷ் , சுகாதார ஆய்வாளா்கள் ரிச்சா்ட் எட்வின்ராஜ், அன்புராஜ், ஆய்வக உதவியாளா் அவிரவன், உட்பட பலா் பங்கேற்றனா்.