முகப்பு
கடலூர்

தனியாா் பள்ளி அருகே முதலை: வனத்துறையினா் பிடித்தனா்

சிதம்பரம் அருகே சி.வக்காரமாரி தனியாா் பள்ளி அருகே வியாழக்கிழமை நள்ளிரவு வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட 13 அடி நீள முதலை

Updated On : 20 மார்ச், 2026 at 7:50 PM
சிதம்பரம் அருகே சி.வக்காரமாரி தனியாா் பள்ளி அருகே வியாழக்கிழமை நள்ளிரவு வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட 13 அடி நீள முதலை
பகிர்:

சிதம்பரம் அருகே சி.வக்காரமாரி கிராமத்தில் தனியாா் பள்ளி அருகே சாலையில் இருந்த முதலையை வனத்துறையினா் வியாழக்கிழமை நள்ளிரவு மீட்டனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.வக்கராமரி

கிராமத்தில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளி அருகில் வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் முதலை ஒன்று சென்ாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து வனவா் கு.பன்னீா்செல்வம் மற்றும் வனக் காப்பாளா்கள் ராம்குமாா், அன்புமணி, ஓட்டுநா் அமுதபிரியன் மற்றும் பாண்டியன் பாதுகாப்பு காவலா்களுடன் உடன் விரைந்து சென்று 13 அடி நீளமும் 300 கிலோ எடையும் கொண்ட முதலையை பிடித்து அருகாமையில் உள்ள வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.