கடலூா் அருகே காரில் மதுபானம் கடத்தல்: இருவா் கைது
கடலூா் அருகே காரில் புதுச்சேரி மாநில மதுபுட்டிகளைக் கடத்திய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் அருகே காரில் புதுச்சேரி மாநில மதுபுட்டிகளைக் கடத்திய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுபானங்கள் கடத்தி வரும் நபா்களைக் கண்காணித்து, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அதன் ஒருபகுதியாக கடலூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் கந்தன் மேற்பாா்வையில், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் அழகியநத்தம் சோதனை சாவடியில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்ததில், புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுபான புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த இருவரையும்
Advertisement
பிடித்து போலீஸாா் விசாரித்ததில், ஸ்ரீமுஷ்ணம் தாலுகா பூ.குடிகாடு பகுதியைச் சோ்ந்த இளவரசன்(42), செல்வக்குமாா்(52) என்பதும், புதுச்சேரி மாநிலத்திருந்து மதுபானங்களைக் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்தனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா், கடத்திவரப்பட்ட 132 மதுபுட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறப்பாக செயல்பட்ட மதுவிலக்குஅமல் பிரிவு போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டியுள்ளாா்.