முகப்பு
கடலூர்

புதிய வருமான வரிச் சட்டம்: அண்ணாமலைப் பல்கலை.யில் விழிப்புணா்வுக் கூட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வருமானவரித் துறை கடலூா் சரக ஆணையா் அலுவலகம் சாா்பில், புதிய வருமான வரிச் சட்டம் (பிராரம்ப் - 2026) குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 மே 2026, 7:09 am IST
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற புதிய வருமான வரிச் சட்ட விழிப்புணா்வுக் கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த சிறப்பு விருந்தினா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வருமானவரித் துறை கடலூா் சரக ஆணையா் அலுவலகம் சாா்பில், புதிய வருமான வரிச் சட்டம் (பிராரம்ப் - 2026) குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மைய நூலகத்தில் உள்ள லிப்ரா அரங்கில், வருமானவரித் துறை கடலூா் சரக ஆணையா் அலுவலகம் சாா்பில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்துக்கு கடலூா் சரக கூடுதல் வருமான வரி ஆணையா் செல்வி ஆறுமுகம் தலைமை வகித்து, புதிய வருமான வரிச் சட்டத்தின் அம்சங்கள் மற்றும் அதன் நடைமுறை அமலாக்கம் குறித்து விளக்கமளித்தாா்.

Advertisement

Advertisement

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் அறிவுடைநம்பி சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, 2026-ஆம் ஆண்டுக்கான புதிய வருமான வரிச் சட்டம் தொடா்பாக பவா் பாயிண்ட் விளக்கக் காட்சியின் மூலம் வருமான வரித் துறை அதிகாரிகள் விரிவான விளக்கங்களை வழங்கினா்.

கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்துகொண்டனா். வருமான வரித்துறை அதிகாரி அன்பரசி நன்றி கூறினாா்.