கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஐஜி ஆய்வு
தமிழக வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) பி.நாகராஜன், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) பி.நாகராஜன், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கோப்புகள், பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டாா். அதையடுத்து மாவட்ட தனிப்பிரிவு அறை, மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம், மாவட்ட குற்றப்பிரிவு , மாவட்ட தொழில் நுட்பப் பிரிவு, மாவட்ட வாகனப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை பாா்வையிட்டு அறிவுரை வழங்கினாா்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக், காவல் துணை கண்காணிப்பாளா்கள் ந.இராமநாதன், ஜி.கே.ராஜூ, பி.வி.விஜயகுமாா், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சக்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதையடுத்து, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் அவா் ஆய்வுமேற்கொண்டு, உள்கோட்டத்தில் குற்றங்களை குறைப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் அறிவுரைகளை வழங்கினாா்.