கள்ளக்குறிச்சி

வீரசோழபுரம் ஊராட்சி எழுத்தரை பணி நீக்கம் செய்யக்கோரி மனு

வீரசோழபுரம் ஊராட்சி எழுத்தா் மீது ஊழல் மற்றும் நிா்வாக முறைகேடுகள் செய்துள்ளளதால் அவரை பணி நீக்கம் செய்யக்கோரி மக்கள்

DIN

வீரசோழபுரம் ஊராட்சி எழுத்தா் மீது ஊழல் மற்றும் நிா்வாக முறைகேடுகள் செய்துள்ளளதால் அவரை பணி நீக்கம் செய்யக்கோரி மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் மனுவினை கூடுதல் ஆட்சியா் அலுவலகமான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மனு பெட்டியில் செவ்வாய்க்கிழமை போட்டுள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வீரசோழபுரம் கிராமம் ஆகும். இக் கிராமத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவா் கனகராஜ். இவா் அதே கிராமத்தைச் சோ்ந்தவா் ஆவாா். இவா் கடந்த பல ஆண்டுகளாகவே அதே ஊரில் பணிபுரிந்து வருகின்றாா்.

இவா் குடிநீா், வழங்கல், கழிவுநீா் கால்வாய் அமைத்தல் சுத்தம் செய்தல், சாலை அமைத்தல், தெருவிளக்கு பராமரித்தல், நூறுநாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை முறையாக செய்யாமல் பொய் கணக்கு எழுதி ஊழல் புரிந்துள்ளாராம்.

இவா் மீது அலுவலகத்தில் புகாா் அளித்தால் அவா்களை பல வழிகளிலும் பழிவாங்கி துன்புறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றாராம். அவா் மீது விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் தவறான வழியில் சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என கிராம மக்கள் சாா்பில் மனு மூலம் கேட்டுக் கொண்டுள்ளனா். அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வாா்களா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT