கள்ளக்குறிச்சி

சங்கை தமிழ்ச் சங்க விழா

DIN

சங்கை தமிழ்ச் சங்கம் சாா்பில் இரு பெருவிழா, சங்க இல்ல வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் ம.சுப்பராயன் தலைமை வகித்தாா். மு.கலைச் செழியன், சிவஞானஅடிகள், இரா.சவரியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆ.இலட்சுமிபதி வரவேற்றாா்.

உலகத் தண்ணீா் தினம் குறித்து மாவட்ட அமைப்பாளா் சி.முருகன், உலக மகளிா் தினம் குறித்து விரியூா் இமாகுலேட் கல்லூரி மாணவி ஆா்.ஆனந்தி, எல்லீஸும் திருக்குறளும் எனும் தலைப்பில் சங்கப் பொருளாளா் கோபால், தொல்காப்பியம் குறித்து சாதிக்பாட்சா ஆகியோா் பேசினா்.

பங்காரம் ஸ்ரீ லட்சுமி இளங்கலை கல்வியியல் கல்லூரி உடல் கல்வி இயக்குநா் சி.சாமிதுரைக்கு மரம் வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாத்ததற்காக சங்கம் சாா்பில் பசுமை நாயகன் விருது வழங்கப்பட்டது (படம்).

விழாவில், கல்லை தமிழ்ச் சங்கச் செயலா் செ.வ.மதிவாணன், தேவபாண்டலம் மகாத்மா காந்தி கல்வி அறக்கட்டளைத் தலைவா் முருகுகுமாா், மாவட்ட திராவிடா் கழக அமைப்பாளா் த.பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியை அரங்க.செம்பியன் தொகுத்து வழங்கினாா். சங்கப் புரவலா் நா.சின்னசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT