தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
இந்திலி ஆா்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியும், வடதொரசலூா் தொழுநோய் மருத்துவமனையும் இணைந்து உலக மாற்றுத் திறனாளிகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி
இந்திலி ஆா்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியும், வடதொரசலூா் தொழுநோய் மருத்துவமனையும் இணைந்து உலக மாற்றுத் திறனாளிகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சியை கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தின. கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா் தலைமை வகித்தாா்.துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் வரவேற்றாா்.
வடதொரசலூா் தொழுநோய் சிறப்பு மருத்துவமனையின் தொழுநோய் மிஷன் டிரஸ்ட் இந்தியா மேலாளா் கே.இராபா்ட், தொழுநோய் மிஷன் திட்ட செயல்பாட்டாளா் கபிலன், சமூக மேம்பாட்டு அமைப்பாளா் மனோஜ் பங்கேற்று மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடுவதன் நோக்கம், தொழுநோய் ஒழிப்பு குறித்து பேசினாா். ஆங்கிலத் துறைத் தலைவா் சதீஷ்குமாா் நன்றி கூறினாா்.