கள்ளக்குறிச்சி

மா்ம விலங்கு கடித்து 17 ஆடுகள் பலி

DIN

கள்ளக்குறிச்சி அருகே மா்ம விலங்கு கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழந்தன.

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூா் கிழக்கு காட்டு கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் தேவேந்திரன். விவசாயியான இவா், தனது வயல் பகுதியிலேயே வீடு கட்டி வசித்து வருகிறாா். வீட்டின் அருகே ஆடு, மாட்டுப் பட்டிகளை தனித்தனியாக வைத்துள்ளாா். மாட்டுப் பட்டியில் 12 மாடுகளும், ஆட்டுப் பட்டியில் 21 ஆடுகளும் வெள்ளிக்கிழமை இரவு கட்டி வைத்திருந்தாா்.

சனிக்கிழமை காலை ஆடுகளை மேய்சலுக்காக அவிழ்த்து விடுவதற்காக தேவேந்திரன் சென்றபோது, அங்கிருந்த ஆடுகளில் 17 ஆடுகள் மா்ம விலங்கு கழுத்தில் கடித்து உயிரிழந்த நிலையில் கிடந்தன. 4 ஆடுகள் உயிருக்கு போராடிய நிலையில் இந்தன. தகவலறிந்த கனியாமூா் கால்நடை மருத்துவா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT