கள்ளக்குறிச்சி

மனைவியை கத்தியால் குத்திய கணவா் தற்கொலை

DIN

குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்தியவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், ஆண்டி மரூா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணுடையாா் மகள் தங்கம்மாள் (35). இவரை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (41) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனா்.

திருமணமான சில மாதங்களிலேயே தங்கம்மாள் கணவரை அவரது பெற்றோா் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டாா்.

இந்த நிலையில், வெளி நாட்டில் வேலை செய்து வந்த வெங்கடேசன் சில மாதங்களுக்கு முன்பு ஊா் திரும்பினாா். இதிலிருந்து கணவன், மனைவி இடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததாம்.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் மனைவியை கத்தியால் குத்திவிட்டு சென்றுவிட்டாராம்.

இதில் பலத்த காயமடைந்த தங்கம்மாள் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், வெங்கடேசன் புதுஉச்சிமேடு கிராமத்தில் தனியாா் நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT