கள்ளக்குறிச்சியில் நவ.30-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (நவ.30) நடைபெறவுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (நவ.30) நடைபெறவுள்ளது.
வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகிக்கிறாா். இதில், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகள், குறைகள் குறித்து தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரகம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.