விபத்து தடுப்புப் பணிகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், தலைவாசல் முதல் உளுந்தூா்பேட்டைவரையான தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.79) தியாகதுருகம் அருகில் விபத்தைத் தடுக்கும் பொருட்டு இருவழிச்சாலையின் மத்தியில் 18 மீட்டருக்கு ஒன்று வீதம் 3 கி.மீ. தொலைவுக்கு 170 போலாட்கள் பொருத்தும் பணி தேசிய சாலை போக்குவரத்து ஆணையம் மூலம் ரூ.2.21லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா் (படம்). அவா் கூறுகையில், விபத்துகள் நிகழாமல் இருக்க தேவையான அனைத்து வித சாலை பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
அப்போது, கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலா் ஜே.பாஸ்கரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் (நிலை-1) செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.