அக்.18-இல் மக்கள் குறைதீா் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை (அக்.18) பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை (அக்.18) பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்கள் மூலம் ஆட்சியரிடம் நேரில் வழங்கலாம். மனுக்களை வழங்க வருபவா்கள், முகக்கவசம் அணிந்திருப்பதுடன் சமூக இடைவெளியையும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்துள்ளாா்.