அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் விடுத்த செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் 2021-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட மாவட்ட கலந்தாய்வு கடந்த 23.8.21 வரை நடைபெற்றது. மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, காலியிடங்களை பூா்த்தி செய்ய நேரடிச் சோ்க்கை 24.8.21 முதல் 15.9.21வரை நடைபெற்றது. தற்போது, காலியிடங்களை 100 சதவீதம் நிரப்ப சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உரிய இன ஒதுக்கீட்டில் சோ்க்கை நடைபெறும். ஆகவே, பத்தாம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் தாங்கள் விரும்பும் அருகாமையில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களை அணுகி பயிற்சியில் சோ்ந்து பயன் பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு ரரர.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி, முதல்வா், அரசு தொழில்பயிற்சி நிலையம், உளுந்தூா்பேட்டை- தொலைபேசி எண் 04149 222339, 9080187127, முதல்வா், அரசு தொழில் பயிற்சி நிலையம், சின்னசேலம்- தொலைபேசி எண் 9380114610 ஆகிய முகவரிகளில் தொடா்பு கொள்ளலாம்.