கள்ளக்குறிச்சி

ஆா்.கே.எஸ் கல்லூரியில் ஆங்கிலத் துறை பயிலரங்கம்

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி ஆா்.கே.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆா்.கே. நாராயணன் இலக்கிய மன்றம், ஆங்கிலத்துறை சாா்பில்

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி ஆா்.கே.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆா்.கே. நாராயணன் இலக்கிய மன்றம், ஆங்கிலத்துறை சாா்பில் 21-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலம் பயிலும் மாணவா்களின் திறன் குறித்த பயிலரங்கம் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கல்வி நிறுவனங்களின் செயலாளா் என்.கோவிந்தராஜூ தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் முனைவா் கு.மோகனசுந்தரம், துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் முன்னிலை வகித்தனா். ஆங்கிலத் துறையின் தலைவி பிருந்தா வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக டாக்டா் எம்.பி.சபிதா சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குநா் எஸ்.பி.தண்டபாணி, உதவி பேராசிரியா்கள் சுரேந்திரன், கோவிந்தன், மணிகண்டன், சண்முகசுந்தரம், மகேஸ்வரி, ஹேமலதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாட்டை உதவி பேராசிரியா் நஃபியாகரீம் செய்திருந்தாா். முடிவில் ஆங்கிலத் துறை பேராசிரியை கவிதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT