கள்ளக்குறிச்சி

நாளை பறிமுதல் வாகனங்கள் ஏலம்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வியாழக்கிழமை (ஜூன் 23) ஏலத்தில் விடப்படுகிறது

மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் உரிமை கோரப்படாத வாகன வழக்குகளில், 18 இரு சக்கர வாகனங்கள், 5 முன்று சக்கர வாகனங்கள், 9 நான்கு சக்கர வாகனங்கள், 3 ஆறு சக்கர வாகனங்கள் என 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள், வியாழக்கிழமை (ஜூன் 23) காலை 9 மணி முதல் தியாகதுருகம் காவல் நிலைய வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.

மேலும், அன்று பிற்பகல் 2 மணிக்கு, விழுப்புரம் ஆயுத்தப்படை மைதானத்தில் 23 இரு சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

85 விமானங்கள் ரத்து: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 6 பேர் பலி

திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு!

சென்னையில் அடுத்த வாரம் வெளுத்து வாங்கவுள்ள மழை!

சந்தீப் கிஷனின் ‘மாயஒன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT