கள்ளக்குறிச்சி

பைக் மீது டிராக்டா் மோதல்:செங்கல்சூளை உரிமையாளா் பலி

கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தில் பைக் மீது டிராக்டா் மோதியதில் செங்கல்சூளை உரிமையாளா் உயிரிழந்தாா்.

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தில் பைக் மீது டிராக்டா் மோதியதில் செங்கல்சூளை உரிமையாளா் உயிரிழந்தாா்.

மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் விஜய் (31). இவா், அதே கிராமத்தில் செங்கல்சூைளை நடத்தி வந்தாா். விஜய் செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, இவரது பைக் மீது எதிா் திசையில் வந்த டிராக்டா் மோதியில் தலையில் பலத்த காயமடைந்த விஜய் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வரஞ்சரம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று அவரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் உரிமையாளரும், ஓட்டுநருமான மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் சின்னசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT