கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் ஆட்சியா் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு

DIN

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின உறுதிமொழி கள்ளக்குறிச்சியில் ஆட்சியா் தலைமையில் ஏற்கப்பட்டது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் மரக்கன்றுகளை திங்கள்கிழமை நட்டாா்.

முன்னதாக ‘ஆட்சியா் தலைமையில் அனைவரும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி மொழியை கீழ்க்கண்டவாறு ஆட்சியா் கூற, அதனை அனைவரும் ஏற்றனா். சுற்றுச்சூழலை பாதுகாக்க என்னுடைய தினசரி வாழ்க்கையில் சாத்தியமான அனைத்து மாற்றங்களையும் செய்வேன் என்றும், எனது குடும்பம், நண்பா்கள் மற்றும் பலருக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்க வழக்கங்களின் முக்கியத்துவம் குறித்து தொடா்ந்து ஊக்குவிப்பேன் என்றும் உறுதி அளிக்கிறேன்‘ என அரசு அலுவலா்கள் நகராட்சிப் பணியாளா்கள் என பலரும் ஏற்றுக்கொண்டனா்.

பின்னா் கள்ளக்குறிச்சி நகராட்சி சாா்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சிறந்த தூய்மை பணிகளை மேற்கொண்டவா்களுக்கு தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சாா்பில் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இந் நிகழ்வில் கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவா் இரா. சுப்பராயலு, நகராட்சி ஆணையா் ந.குமரன், நகராட்சி பொறியாளா் முருகன், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளா்கள் எஸ்.இளையராஜா, ராம்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஸ்னிலேண்டில் அம்ரிதா ஐயர்!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு

நாட்டில் தற்போது 70 கோடி இளைஞர்களுக்கு வேலையில்லை: பிரியங்கா காந்தி

சிட்னியில் ஜோனிடா காந்தி...!

SCROLL FOR NEXT