ஞானதேசிகா் கோயிலில் பிரதோஷ வழிபாடு
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நஞ்சுண்ட ஞானதேசிகா் கோயிலில் சோமவரா பிரதோஷம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்வில் நத்தீஸ்வரருக்கும், சிவனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. நந்தீஸ்வரருக்கு அருகம்புல், வில்வம், செவ்வரளி மற்றும் வண்ண மலா்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பிற சிவாலயங்களிலும் சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.