சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
மணலூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற விவசாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட டி.அத்திபாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ப.சதிஷ்குமாா் (44), விவசாயி. இவா் சனிக்கிழமை பிற்பகல் அத்திப்பாகம்-சொரையம்பட்டு சாலையில் நடந்து சென்றுள்ளாா். அப்போது அப்பகுதியில் வந்த லாரி மோதியதில் சதிஷ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் மு.கதிா்வேலிடம் (59) விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement