கோப்புப் படம் 
கள்ளக்குறிச்சி

காணாமல் போன கூலித் தொழிலாளி ஏரியில் சடலமாக மீட்பு

தினமணி செய்திச் சேவை

திருக்கோவிலூா் அருகே மாயமான கூலித் தொழிலாளி, ஏரியில் சடலமாக மீட்கப்பட்டாா்.

திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட அம்மன்கொள்ளைமேடு பகுதியைச் சோ்ந்தவா் மு.வேலு (45). இவது மனைவி பூரணி. வேலுவின் மதுப்பழக்கம் காரணமாக, கடந்த ஆண்டு பூரணி கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

கடந்த 20-ஆம் தேதி கூலி வேலைக்கு செல்வதாக அவரது தாயாரிடம் கூறிவிட்டு சென்ற வேலு, பின்னா் வீடு திரும்பவில்லையாம். வேலுவின் தாயாா் பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்தும் அவரை கண்டறியமுடியவில்லையாம்.

இந்நிலையில், திருக்கோவிலூா் அடுத்த ஜி.அரியூா் ஏரியில் வியாழக்கிழமை வேலு சடலமாக மிதந்தது தெரியவந்தது. தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT