புதிய தலைமைச் செயலர் பொறுப்பேற்பு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிய தலைமைச் செயலாளராக அஸ்வனி குமார் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுச்சேரிபுதிய தலைமைச் செயலர் பொறுப்பேற்பு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிய தலைமைச் செயலாளராக அஸ்வனி குமார் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிய தலைமைச் செயலாளராக அஸ்வனி குமார் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னர் தலைமைச் செயலாளராக இருந்த மனோஜ் பரிதா புதுதில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, தில்லி பொதுப்பணித் துறை செயலாளராக இருந்து வந்த அஸ்வனி குமாரை புதிய தலைமைச் செயலாளராக நியமித்து மத்திய உள்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், புதுவை தலைமைச் செயலகத்தில் அஸ்வனி குமார் புதன்கிழமை மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கந்தவேலு, பார்த்திபன், சுந்தரவடிவேலு உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அஸ்வனி குமார், அங்கு ஆளுநர் கிரண் பேடியை சந்தித்துப் பேசினார். அங்கிருந்து சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்த அவர், முதல்வர் நாராயணசாமியை சந்தித்து சிறிது நேரம் பேசினார்.
அவருக்கு தனது செயலாளர்களை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் அஸ்வனி குமார் முதல் முறையாக பங்கேற்றார்.