ராகுல் காந்தியுடன் புதுவை காங்கிரஸ் தலைவர் சந்திப்பு
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
புதுதில்லிக்கு சென்ற புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவரும், மாநில பொதுப் பணித் துறை அமைச்சருமான நமச்சிவாயம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து புதுவை அரசியல் நிலவரம், காங்கிரஸ் மாநில நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டோரின் விவரங்களைத் தெரிவித்தார்.
இதையடுத்து, கட்சிப் பதவி வழங்குவதில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், வரும் 29-ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் தில்லியில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும்படியும் நமச்சிவாயத்துக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே, புதுவை அரசியல் நிலவரம் குறித்துப் பேசுகையில், முதல்வர் நாராயணசாமிக்கு எதிரான கருத்துகளையே, ராகுலிடம் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை எதிர்கொள்வதற்காக முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கத்துடன் தனியாக ஆலோசனை நடத்தினார். இது புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.