முகப்பு
புதுச்சேரி

இளைஞர் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது

புதுச்சேரியில் இளைஞர் கொலை வழக்குத் தொடர்பாக, மேலும் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Updated On : 29 மார்ச், 2018 at 8:55 AM
பகிர்:

புதுச்சேரியில் இளைஞர் கொலை வழக்குத் தொடர்பாக, மேலும் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 புதுச்சேரி திலாசுப்பேட்டை கருணாஜோதி நகரைச் சேர்ந்தவர் ஜாக்கி (எ) சரவணன் (19). இவர், கடந்த மார்ச் 23-ஆம் தேதி மர்மக் கும்பலால் பட்டப்பகலில் காந்தி நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, கோரிமேடு காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், ஏற்கெனவே, மாந்தோப்பைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் உள்ளிட்ட 10 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
 இந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்த மாந்தோப்புப் பகுதியைச் சேர்ந்த ஜோஸ்வா, சாந்தகுமார் ஆகியோரை காவலர்கள் புதன்கிழமை கைது செய்தனர். மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.