முகப்பு
புதுச்சேரி

உலக நுகர்வோர் தின விழா 

குடிமைப்பொருள் வழங்கல் துறை, உழவர் நகராட்சி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் உலக நுகர்வோர் தினவிழா புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 மார்ச், 2018 at 8:54 AM
பகிர்:

குடிமைப்பொருள் வழங்கல் துறை, உழவர் நகராட்சி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் உலக நுகர்வோர் தினவிழா புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
 ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் பாஸ்கரன் தலைமை வகித்தார். சந்திரா வரவேற்றார். முனைவர் திருநாராயணன் நுகர்வோர் விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்தார். பேரணியில் மாணவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
 என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் நுகர்வோரின் கடமைகள் குறித்து பேசினார். தாகூர் கலைக்கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் இளங்கோ வாழ்த்துரை வழங்கினார். முத்துக்கண்ணு சிறப்புரை ஆற்றினார். மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. சப்தர் ஹஷ்மி குழுவினர் இசை மூலம் நுகர்வோர் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வழக்குரைஞர் ராஜா நுகர்வோர் சட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். ராகினி நன்றி கூறினார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.