முகப்பு
புதுச்சேரி

மீனவர் கொலை வழக்கு: 3 பேரிடம் விசாரணை

புதுச்சேரியில் மீனவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 15 மே, 2018 at 4:37 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

புதுச்சேரியில் மீனவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி குருசுக்குப்பம் மரவாடி தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (46). காங்கிரஸ் மீனவரணி பொதுச் செயலரான இவர், கடந்த 6-ஆம் தேதி காலை மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஆம்பூர் சாலை-செட்டித் தெரு சந்திப்பில் மர்மக் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து பெரியக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலை தொடர்பாக வைத்திக்குப்பத்தை சேர்ந்த உண்ட நாராயணன், சுடுகாட்டான், கடந்த மாதம் கொலை செய்யப்பட்ட மீனவர் மாறனின் மகன் ராஜ்கமல், வம்பாகீரப்பாளையம் அதிமுக பிரமுகர் ஞானவேல் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே முத்தியால்பேட்டையை சேர்ந்த புல்ரி உள்பட 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை பிடித்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி
வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.