புதுச்சேரி

மே 19 வரை கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை: தேர்தல் ஆணையம்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட வருகிற மே 19 -ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக புதுச்சேரி தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

DIN

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட வருகிற மே 19 -ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக புதுச்சேரி தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
 இதுகுறித்து புதுவை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வி. கந்தவேலு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துதல், அத்தகைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடுதல் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 மக்களவை முதல்கட்ட தேர்தல், ஆந்திரம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்கள், சில மாநில, யூனியன் பிரதேசங்களுக்கான இடைத் தேர்தல்கள் ஆகியவை ஏப். 11- ஆம் தேதி நடைபெற்றன. தொடர்ந்து மே 19 -ஆம் தேதி வரை நடைபெறுகிறுது.
 அந்த நேரத்தில், மக்கள் பிரதிநித்துவச் சட்டம் 1951 பிரிவு 126 ஏ (1) (2) மற்றும் 16 (1) (பி) -இன்படி ஏப். 11 காலை 7 மணி முதல் மே 19 -ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது, அவற்றை பத்திரிகை, தொலைக்காட்சி, மின்னணு ஊடகங்களின் வாயிலாக வெளியிடுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ சேவையில் இயல்புநிலை திரும்பியது: ஊழியா்களுக்கு சிஇஓ பீட்டா் எல்பா்ஸ் நன்றி

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் கண்டனப் பேரணி

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

SCROLL FOR NEXT