பொதுப் பணித் துறை பொறியாளர்கள் 2 -ஆவது நாளாக போராட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, புதுவை மாநில பொதுப்பணித் துறை பொறியாளர்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, புதுவை மாநில பொதுப்பணித் துறை பொறியாளர்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, பொதுப் பணித் துறை பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித் துறை பொறியாளர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.
முதல் நாளில் விடுப்பு எடுத்து தர்னாவில் ஈடுபட்ட அவர்கள், 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பொறியாளர்களின் போராட்டம் காரணமாக அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டதுடன், அலுவலகமும் வெறிச்சோடிக் காணப்பட்டது.