புதுச்சேரி

விதைப் பண்ணையில் 17 பேருக்கு தினக்கூலி ஊழியருக்கான பணி ஆணை: அமைச்சர்  வழங்கினார்

விதைப் பண்ணையில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றிய 17 பேருக்கு தினக்கூலி ஊழியருக்கான பணியாணையை  அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் சனிக்கிழமை வழங்கினார்.

DIN


விதைப் பண்ணையில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றிய 17 பேருக்கு தினக்கூலி ஊழியருக்கான பணியாணையை  அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் சனிக்கிழமை வழங்கினார்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், மாதூரில் உள்ள அரசு விதைப் பண்ணையில் நீண்ட காலமாக வவுச்சர் அடிப்படையில் பணி செய்துவந்த 17 பேரை புதுச்சேரி அரசு தினக்கூலி ஊழியராக பணியமர்த்தியது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருந்தாலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் பணியாணை ஊழியருக்கு தரப்படாமல் இருந்தது.
இந்நிலையில், இவர்களுக்கு பணியாணை வழங்கும் நிகழ்ச்சி திருநள்ளாறில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஊழியருக்கு பணியாணையை வழங்கினார். பணியாணைப் பெற்ற ஊழியர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் வேளாண் இயக்குநர் ப.முகம்மது தாசீர், துணை வேளாண் இயக்குநர் ஆர்.கணேசன், அலுவலக கண்காணிப்பாளர் ம. தாமோதரன், வேளாண் அலுவலர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT