புதுச்சேரி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

DIN

திருபுவனை பகுதியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.
 திருபுவனை பாங்கி தெருவைச் சேர்ந்தவர் மலைச்சாமி (50). இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். மேலும், மற்ற நேரங்களில் விவசாய வேலையும் செய்து வந்தார். இவருக்கு மூக்கம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர்.
 இந்த நிலையில், மலைச்சாமி செவ்வாய்க்கிழமை காலை அதே பகுதியைச் சேர்ந்த அய்யம்பெருமாளுக்குச் சொந்தமான விவசாய நிலத்துக்கு வேலைக்குச் சென்றார். அங்குள்ள மோட்டார் பம்ப்செட் அருகே மலைச்சாமி கடப்பாரையால் பள்ளம் தோண்டியபோது, பள்ளத்துக்கு அடியில் சென்ற மின்சார வயரில் கடப்பாரை உரசியதால் மின்கசிவு ஏற்பட்டு, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், மலைச்சாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 இதுகுறித்து தகவலறிந்த திருபுவனை காவல் ஆய்வாளர் கலைச்செல்வன் தலைமையிலான போலீஸார், மலைச்சாமியின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT