புதுச்சேரி

மாநில கபடிப் போட்டியில் பங்கேற்க 22-க்குள் விண்ணப்பிக்கலாம்

புதுவை மாநில அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள், வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

புதுவை மாநில அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள், வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து புதுவை மாநில கபடி சங்கத் தலைவர் சிவக்குமார் வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநில கபடி சங்கம் சார்பில், மாநில அளவிலான 46-ஆவது சாம்பியன்ஷிப் கபடி போட்டி வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் கபடி அணிகளுக்கான பதிவு விண்ணப்பங்கள் கடந்த 10-ஆம் தேதி முதல் திருபுவனைபாளையம் சாலையில் சினிமா திரையரங்கு வணிக வளாகத்தில் உள்ள கபடி சங்க அலுவலத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் 19-ஆம் தேதி இரவு 8:30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
 பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கபடிப் போட்டிக்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் சிவக்குமார், பொதுச் செயலர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT