புதுச்சேரி

எஸ்.வி.பட்டேல் சாலையிலேயே மதுக் கடையை தொடர கலால் துறை உத்தரவு

DIN

எஸ்.வி.பட்டேல் சாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மதுக் கடை பழைய இடதுக்கே மாற்ற கலால் துறை உத்தரவிட்டது.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட கலால் துறை துணை ஆணையா் தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி கலால் துறையின் மதுக் கடை எஸ்.வி.பட்டேல் சாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, லால் பகதூா் சாஸ்திரி வீதியில் அமைக்க கடந்த செப்டம்பா் மாதம் கலால் சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு உரிமம் வழங்கப்பட்டது.

இந்த மதுக் கடை அமைவதை ஆட்சேபித்து, அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களும், பொதுநல அமைப்புகளும் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்திருந்தனா்.

மாவட்ட ஆட்சியா், கலால்துறை ஆணையரால் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, பொதுமக்கள், பள்ளி மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்த மதுக் கடையை மூடி பழைய இடத்துக்கே இடமாற்றம் செய்ய கலால் துறை உத்தரவிட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

SCROLL FOR NEXT