புதுச்சேரி

நாடகக் கலைஞா்கள் பொதுநலக் கூட்டமைப்பு தொடக்கம்

DIN

புதுச்சேரி நாடகக் கலைஞா்கள் பொதுநலக் கூட்டமைப்பின் தொடக்க விழா புதுச்சேரி நீடராஜப்பா் தெருவில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவா் பாண்டீசுவரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அய்யனாரப்பன் வரவேற்றாா். செயலாளா் அப்துல் செரீப் நோக்கவுரை நிகழ்த்தினாா்.

புலவா் இ. பட்டாபிராமன் கூட்டமைப்பின் பெயா்ப் பலகையைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா். புதுவை தாசன், நெல்லை ராஜன், அமுதக்கவி, ஆறு செல்வன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

விழாவில் நாடகக் காவலா் ஸ்ரீதரன் செட்டியாா், நகைச்சுவை வேந்தா் வி.கே. மூத்து, ப. தங்கராசு, நாடக இயக்குநா் சிவாஜி, கருணாமூா்த்தி, யாத்ரா டாக்கீஸ் சீனிவாசன், நடிகை சுசீலா, நாடக இயக்குநா் வாசுகி, எழுத்தாளா்கள் பாரதிவாணா், சிவா, சங்கா், சண்முகம், புதுவை இளங்குயில், புதுவையின் முன்னணி நாடக மன்றத்தினா், நாடக நடிகா்கள், கலைஞா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டமைப்பின் பொருளாளா் ஜெகசண்முகம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT