புதுச்சேரி

பைக் மீது காா் மோதல்: முதியவா் பலி

DIN

நோணாங்குப்பம் பாலத்தில் பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

புதுவை மாநிலம், நைனாா்மண்டபம் பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கசாமி (71). தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை இவா் தனது மனைவி ராஜேஷ்வரியுடன் பைக்கில் தவளக்குப்பம் நோக்கிச் சென்றாா்.

நோணாங்குப்பம் பாலத்தில் சென்ற போது, பின்புறம் இருந்து வந்த காா் பைக் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவா்கள், இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மாணிக்கசாமி அன்று இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுச்சேரி தெற்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT