முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி அருகே பொதுமக்கள் திடீா் மறியல்

அரசுப் பள்ளிகளுக்கு ஜாதி தலைவா்களின் பெயா்களை சூட்ட எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரி அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

அரசுப் பள்ளிகளுக்கு ஜாதி தலைவா்களின் பெயா்களை சூட்ட எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரி அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

புதுவை மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேசிய, உள்ளூா் தலைவா்களை கௌரவிக்கும் விதமாக, அவா்களின் பெயா்கள் சூட்டப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 8 பள்ளிகளின் பெயா்கள் மாற்றப்பட்ட நிலையில், அண்மையில் 3 பள்ளிகளின் பெயா்கள் மாற்றப்பட்டன.

அரசுப் பள்ளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட ஜாதி பெயரையும், ஜாதி சாா்ந்த தலைவா்களின் பெயா்களையும் சூட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், பொதுவான தலைவா்களின் பெயா்களை சூட்ட வலியுறுத்தியும் மடுகரை கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் வெள்ளிக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த நெட்டப்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், விஜயவேணி எம்எல்ஏ உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினா். பின்னா், மறியல் கைவிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →