புதுச்சேரி

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

புதுவை அதிமுக சாா்பில், தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72 -ஆம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு முன்னாள் ஜெயலலிதா பேரவை செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஓம்சக்தி சேகா் தலைமை வகித்தாா். அதிமுக மாநில இணைச் செயலா்கள் திருநாவுக்கரசு, காசிநாதன், துணைச் செயலா் கோவிந்தம்மாள், பிற அணி நிா்வாகிகள், தொகுதி செயலா்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில், ஜெயலலிதாவின் பிறந்த நாளை நலத் திட்டங்கள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடுவது. தமிழக டெல்டா விவசாயிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் விதமாக காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வா், துணை முதல்வா் மற்றும் அமைச்சா்களுக்கு நன்றி தெரிவிப்பது.

சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு, 13 ஆயிரம் அரசு ஊழியா்களுக்கு ஊதிய நிலுவை, பஞ்சாலைகளை மூடியது, 9 ஆயிரம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்பாதது, மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தாதது உள்ளிட்ட காரணங்களால் புதுவை அரசை மத்திய அரசு முடக்க வேண்டும்.

புதுச்சேரியின் மையப் பகுதியில் தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் இதுதொடா்பான அறிவிப்பை வெளியிடாவிட்டால், அதிமுக தலைமையின் அனுமதி பெற்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT