புதுச்சேரி

புதுவை பேரவையில் பட்ஜெட் நிறைவேறியது: காலவரையறையின்றி பேரவை ஒத்திவைப்பு 

புதுவை பேரவையில் பட்ஜெட் நிறைவேறியதையடுத்து அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

DIN

புதுவை பேரவையில் பட்ஜெட் நிறைவேறியதையடுத்து அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் முதல்வர் நாராயணசாமி ரூ.9,000 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி உரையாற்றினார். என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் பேரவை மூடப்பட்டு, பேரவைக்கூட்டம் பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையில் மரத்தடியில் சனிக்கிழமை பகல் 1.30 மணி அளவில் தொடங்கியது. 

மானியக் கோரிக்கைகள் தொடர்பாக எதிர்கட்சி எம்எல்ஏக்கள் பேசினர். இறுதியாக பட்ஜெட் நிறைவேறியது. இறுதியாக பேரவையை பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து காலவரையின்றி ஒத்திவைத்தார். என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் அவையில் பங்கேற்கவில்லை. பேரவைக்கூட்டம் பகல் 3.45 மணி அளவில் நிறைவு பெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT