புதுச்சேரி

புதுவை சட்டப்பேரவையை ஜூலை 31 வரை மூட உத்தரவு

DIN

சட்டப்பேரவை காவலர் 2 பேருக்கும், சட்டப்பேரவை உறுப்பினர்  உதவியாளர் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதால் சட்டப்பேரவை ஜூலை 31ஆம் தேதி வரை மூடப்படும் என்று பேரவை செயலாளர் முனிசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த 25ஆம் தேதி என் ஆர் காங்கிரஸ் உறுப்பினர் ஜெயபால், 26 ம் தேதி சட்டப்பேரவை காவலர்கள் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நாளை வரை சட்டப்பேரவை செயலகம் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மேலும் சட்டப்பேரவை காவலர்கள் இரண்டு பேருக்கும், சட்டப்பேரவை உறுப்பினர் உதவியாளர் ஒருவரும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது மேலும் யாருக்கும் பரவக்கூடாது என்பதற்காக வரும் வெள்ளிக்கிழமை அதாவது 31ஆம் தேதி வரை மூடப்படும் என்று சட்டப்பேரவை செயலர் முனிசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT