முகப்பு
புதுச்சேரி

புதுவை சட்டப்பேரவையை ஜூலை 31 வரை மூட உத்தரவு

சட்டப்பேரவை காவலர் 2 பேருக்கும், சட்டப்பேரவை உறுப்பினர்  உதவியாளர் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதால் சட்டப்பேரவை ஜூலை 31ஆம் தேதி வரை மூடப்படும் என்று பேரவை செயலாளர் முனிசாமி அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
பகிர்:

சட்டப்பேரவை காவலர் 2 பேருக்கும், சட்டப்பேரவை உறுப்பினர்  உதவியாளர் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதால் சட்டப்பேரவை ஜூலை 31ஆம் தேதி வரை மூடப்படும் என்று பேரவை செயலாளர் முனிசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த 25ஆம் தேதி என் ஆர் காங்கிரஸ் உறுப்பினர் ஜெயபால், 26 ம் தேதி சட்டப்பேரவை காவலர்கள் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நாளை வரை சட்டப்பேரவை செயலகம் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மேலும் சட்டப்பேரவை காவலர்கள் இரண்டு பேருக்கும், சட்டப்பேரவை உறுப்பினர் உதவியாளர் ஒருவரும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது மேலும் யாருக்கும் பரவக்கூடாது என்பதற்காக வரும் வெள்ளிக்கிழமை அதாவது 31ஆம் தேதி வரை மூடப்படும் என்று சட்டப்பேரவை செயலர் முனிசாமி தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →