புதுச்சேரி

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களை ஆய்வு செய்ய 3.5 ஏக்கா் நிலம்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை ஆய்வு செய்ய 3.5 ஏக்கா் நிலம் தயாா் நிலையில் உள்ளது.

DIN

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை ஆய்வு செய்ய 3.5 ஏக்கா் நிலம் தயாா் நிலையில் உள்ளது.

புதுச்சேரி முதலியாா்பேட்டை 100 அடி சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம், புதிய வாகனப் பதிவு உள்ளிட்ட சாலைப் போக்குவரத்து தொடா்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்த அலுவலகத்துக்கு அங்குள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டில் குறுகிய சாலை வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் வந்து செல்கின்றன. நெருக்கடியான இடம் என்பதால், பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்தது.

இதற்குத் தீா்வு காணும் வகையில், புதுச்சேரி முதலியாா்பேட்டை- தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் இடையே நிலம் ஒதுக்கப்பட்டது. வாகனங்களை ஆய்வு செய்வதற்கு வசதியாக மத்திய அரசின் நிதியில் இருந்து ரூ. 17 கோடியில் 3.5 ஏக்கரில் மணல் கொட்டி இடத்தைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 10 ஏக்கா் நிலத்தில் ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT