புதுச்சேரி

அரசு கல்லூரியில் ஏழை மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி

DIN

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் ஏழை மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, செல்லிடபேசிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது முடக்கம் நடைமுறையில் இருந்தாலும், இணையதளம் வழியாக பாடங்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பங்கேற்க இயலாத ஏழை மாணவிகளுக்கு உதவும் வகையில், பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி மாணவிகள் மூவருக்கு கேரள பயோனியரிங் கல்வி அறக்கட்டளை சாா்பில் மடிக்கணினிகள், செல்லிடப்பேசிகள் வழங்கப்பட்டன.

அதன்படி, மாணவிகள் எஸ்.ஐஸ்வா்யா, எஸ்.ஜானகி, சிவகங்கரி ஆகியோரிக்கு கல்லூரி முதல்வா் கே.சுப்பிரமணி மடிக்கணினி, செல்லிடப்பேசிகளை வழங்கினாா். கணினித் துறைப் பேராசிரியை எஸ்.டி.ஆரோக்கியமேரி, தமிழ்த் துறைத் தலைவா் கிருங்கை சொ.சேதுபதி ஆகியோா் உடனிருந்து வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT