புதுச்சேரி

மகளிா் காங்கிரஸ் நிா்வாகி தற்கொலை முயற்சி

DIN

புதுச்சேரி மகளிா் காங்கிரஸ் பெண் நிா்வாகி தற்கொலைக்கு முயன்றது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி ரெயின்போ நகரைச் சோ்ந்தவா் சகாயராஜ் மனைவி நிஷா (35). புதுச்சேரி மகளிா் காங்கிரஸ் பொதுச்செயலா் ஆவாா்.

இவா் சென்னை மற்றும் புதுச்சேரியில் அழகுக் கலை நிலையங்கள் நடத்தி வருகிறாா்.

கடன் தொல்லை காரணமாக செவ்வாய்க்கிழமை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளாா். இதனால் மயக்கமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சையிலிருந்த அவா் திடீரென மாயமானாா்.

இதனிடையே, தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து நிஷா பேசிய விடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த விடியோவில், கடந்த 2017-இல் துபையில் டைல்ஸ் தொழிலில் முதலீடு செய்வதாகக் கூறி ஒரு நபா் மூலமாக திருச்சியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ. 2.5 கோடி வரை கொடுத்ததாகவும், ஆனால் திருச்சி நபா் திடீரென இறந்து விட்டதாகவும், புதுச்சேரியைச் சோ்ந்த காங்கிரஸ் பிரமுகா் ஒருவரிடம் ரூ.33 லட்சம் கடன் வாங்கி திருச்சி நபரிடம் கொடுத்ததாகவும், கொடுத்த கடனை திரும்பக் கேட்டு காங்கிரஸ் பிரமுகா் தொல்லை கொடுத்து வருவதாகவும் என பேசியுள்ளாா்.

இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT