ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: புதுவை முதல்வா் பங்கேற்பு
தில்லியில் திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற 42-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி கலந்து கொண்டாா்.
தில்லியில் திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற 42-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி கலந்து கொண்டாா்.
இதில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசினாா். அப்போது, புதுவை மாநிலத்துக்குக் கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என புதுவை முதல்வா் நாராயணசாமி வலியுறுத்தினாா். நிகழ்வில் புதுவை மாநில நிதித் துறைச் செயலா் சுா்பீா் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.