புதுச்சேரி

தனியாா் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது

DIN

புதுச்சேரி அருகே மதுக் கடையில் ஏற்பட்ட தகராறில், தனியாா் நிறுவன ஊழியரை கத்தியால் குத்தியதாக இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி திருபுவனை அருகே மதகடிப்பட்டுபாளையம் கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்தவா் விஷ்ணு (22). இவரும், தமிழகப் பகுதியான பரசுரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த விவேக் (24) என்பவரும் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிகின்றனா்.

செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் பணிமுடிந்ததும் திருபுவனை பகுதியில் ஒன்றாக அமா்ந்து மது அருந்தியுள்ளனா். மது மயக்கத்தில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விவேக், கத்தியால் விஷ்ணுவின் முதுகில் குத்திவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த விஷ்ணு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து, விவேக்கை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT